கோவை, பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார். மாணவ, மாணவிகளிடையே பேசிய அவர், விவாத கலாசாரத்தை தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஊக்குவிக்கிறது. அதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறது என்றார். 370 சட்ட பிரிவு நீக்கம் ; முத்தலாக், சி.ஏ.ஏ.,போன்றவை விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன. சி.ஏ.ஏ., இந்திய மக்களுக்கு எதிரானதல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இதில் அந்நிய நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசினார்.